தேர்தல் பிரச்சாரத்தில் சாவல் விட்ட உதயநிதி ஸ்டாலின்…..

  • சேலம் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் சாவல் விட்ட உதயநிதி ஸ்டாலின்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. சேலத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கெளதம சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது பேசிய உடனிதி ஸ்டாப்களின், ” பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்புஉள்ளது என்றும், இதை வெளிப்படையாக நான் சொல்கிறேன், முடிந்தால் வழக்குப் போட்டு பாருங்கள் ” என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment