தேர்தலுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை…!!!! அதிமுக எம்பி அதிரடி பேட்டி…!!!!

தற்போது இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில்  அனைத்திந்திய அண்ணா திராவிட முண்ணேற்றக்கழகத்தின் சார்பாக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் இதுகுறித்து அதிமுக எம்பியும்,மக்களவை துனைசபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

Image result for தம்பிதுரை

அதில் அவர் கூறியதாவது,  வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 10-ம் தேதி அஇஅதிமுக வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தேர்தலை நடத்துவதும், ஒத்திவைப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு எனவும் அதிமுக எம்.பி.தம்பிதுரை திருவாரூரில் பேட்டி அளித்துள்ளார்.இந்த செய்தி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

DINASUVADU.

author avatar
kavitha

Leave a Comment