தேசிய ஆசிரியர் விருது:அரசு பள்ளி ஆசிரியை தேர்வு..!மத்திய அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தை சேர்ந்த ஆர்.ஸதி என்ற அரசு பள்ளி ஆசிரியைக்கு தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் கோவை ஆசிரியர் சத்தி மட்டுமே விருதுக்கு தேர்வாகியுள்ளார் என  மத்திய அரசு அறிவித்துள்ளது நாடு முழுவதும் ஆசிரியர் பணியை சிறப்பித்து வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது ஆசிரியருக்கு குடியரசு தலைவர் வழங்குவார்.
இந்த விருதுகளின் எண்ணிக்கையை இந்தியா முழுவதும் 45 மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.இந்த விருது குறைக்கப்பட்டதால் தமிழகத்திலும் விருது வாங்கும் ஆசிரியரின் எண்ணிக்கையும் குறைந்தந்துள்ளது.
எல்லா மாநிலத்திற்கும் அந்த மாநிலத்தின் சார்பில் 6 ஆசிரியர்களின் பெயர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment