தூத்துக்குடி மீனவ குடும்பத்தினருடன் கேரள முதல்வர் பினராய் விஜயன் சந்திப்பு

ஒக்கி புயலில் உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்த கேரன முதல்வர்  பினராய் விஜயன்.

ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது.

இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM மாநிலசெயலாளர் G.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார் அனைத்து உதவியும் கேரளா அரசு செய்யும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் K.S.அர்ச்சுனன தலைமையில் திருவனந்தபுரம் விரைந்தனர்.இவர்களுடன் Citu மாவட்டதலைவர் ரசல் Cpm மாநகரசெயலாளர் ராஜா, Sfi மாநகர தலைவர்  ஜாய்சன்,விஜயகுமார் தீக்கதிர் ஆகியோருடன் மீனவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 16 பேரும் உடன் சென்றனர்.

இதனிடையில் 5 மணி அளவில் முதல்வர்  பினராய் விஜயனை சந்தித்தனர் அவர் இறந்து போன மீனவ குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார் .தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேர் இறந்துள்ளனர், இவர்கள் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளது இதனால்  DNA பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க உடனடி நடவடிக்கை  எடுக்க தனது தனிப்பட்ட செயலாளரை நீயமித்துள்ளார் நாளை DNA பரிசோதனை முடிந்து இறந்து போன மீனவர்களின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

மேலும் தூத்துக்குடி மாவட்ட  செய்திகளுக்கு தினச்சுவடு உடன் இணைந்திருங்கள்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment