தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளும் புதன்கிழமை (ஆகஸ்ட் 15) மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை தூத்துக்குடியில் டாஸ்மார்க் மதுக்கடைகள், மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் மதுபானம் விற்கப்பட கூடாது. மீறும் பட்சத்தில் அதற்குரிய நபர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *