தூத்துக்குடி : வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து 1000 சரக்கு பெட்டக கொள்ளவு கொண்ட புதிய கப்பல் சேவையை துறைமுகசபை துணைத்தலைவர் நட்ராஜன் துவக்கி வைத்தார். பின்பு தூத்துக்குடி, இராமேஷ்வரம், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் இடையே நீர்வழி பாதையில் பயணிகள் படகு போக்குவரத்து திட்டம் துவங்கப்படவுள்ளது என துறைமுகசபை துணைத்தலைவர் நட்ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.