தி.மு.க-வில் மீண்டும் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன்..!!!

மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், கருப்பசாமி பாண்டியன். ‘கனா என்று அழைக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர். 1977-ம் வருடம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு, தனது 25 வயதிலேயே எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்து திறமையாக செயல்பட்டார். ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி தொகுதிகளில் வெற்றிபெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment