திறக்கப்படாத விமான நிலையத்தில் முதல் ஆளாக இறங்கிய அமித் ஷா..!!

கேரளா மாநிலம், கண்ணூரில் திறக்கப்படாத சர்வதேச விமான நிலையத்தில் முதல் பயணியாக இன்று அமித் ஷா விமானத்தில் வந்திறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. தேசிய தலைவர் இன்று கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டெல்லியில் இருந்து வருகை தந்தார்.வழக்கமாக, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கு பதிலாக கண்ணூர் நகரில் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாத புதிய சர்வதேச விமான நிலையத்தில் அமித் ஷாவின் விமானம் வந்திறங்கியது.இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்னும் நடைபெறாத நிலையில் அமித் ஷா இங்கு முதல் பயணியாக வந்திறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்த கேரள மின்சாரத்துறை மந்திரி மணி, ‘நாட்டில் திறக்கப்படாத விமான நிலையத்தில் ஒரு விமானம் வந்திறங்குவது இதுதான் முதல்முறை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment