திருவாரூரில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை..!

திருவாரூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் முருகானந்தத்தின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறுஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கணவரை பிரிந்து வெளியூர் சென்று விட்டார்.

குழந்தையுடன் தவித்த முருகானந்தம் வாழ்க்கையில் வெறுப்படைந்து வி‌ஷம் குடிந்து மயங்கி வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி முருகானந்தத்தின் தம்பி வெங்கடேஷ் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment