திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்!

 

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளான இன்று காலை இலவச தரிசனத்தில் வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி உள்ளது. இதனால் தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. 300 ரூபாய் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்த திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்காமல் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் பெற்று அதில் உள்ள நேரத்திற்கு, தரிசனத்திற்கு வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு வந்தால் இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்து வருகிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *