திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம்..!!வெகு சிறப்பாக நடந்தது..!!

புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீசெண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடியபடி திருத்தேருக்கு எழுந்தருளினார்.  அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஸ்ரீ செண்பக தியாகராஜர், அம்பாள், விநாயகர், சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் அடுத்தடுத்து தேர்களில் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது. நள்ளாறா தியாகேசா என்ற முழக்கங்களுடன்  பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment