திருச்சி மாவட்டம்,முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் இசை கலைஞர்கள் கலந்து கொண்ட நாத சங்கமம்

திருச்சி மாவட்டம்,முசிறி அருகே மதுரகாளியம்மன் கோவிலில் இசை கலைஞர்கள் சார்பில் நாத சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முசிறி அருகே உள்ள தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி மதுர காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் சார்பில் நாத சங்கமம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திருச்சி,கும்பகோணம், நாமக்கல்,முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment