திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் புதியக் கட்டிடத்தில் எல்ஐசி பணிகள் துவக்கம் ..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் எல்ஐசி கிளை அலுவலகம் வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் இயங்கி வந்தது அந்தக் கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாதால் நவீன மயமாக்கப்பட்ட கட்டிடம் வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளால் துவக்கி வைக்கப் பட்டது அந்த கட்டிடத்தில் பல பராமரிப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திங்கள் முதல் புதிய கட்டிடத்தில் பணிகள் துவங்கப் பட்டன.; முகவர் தண்டபாணிக்கு காசாளர்பிரிமியத ;தவணைக்கான முதல் ரசீதை வழங்கினார் கிளை மேலாளர் தங்கராஜ் புதிய பாலிசிக்கான ரசீதை பாலிசிதாரரிடம் வழங்கினார் விழாவுக்கான ஏற்பாடுகளை காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைப் பொறுப்பாளர்கள் ரமேஷ்பாண்டியன் ரமேஷ் முருகன் முகவர் சங்க துரைராஜ் மற்றும் வளர்ச்சி அதிகாரி கோபால் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர் கடந்த சில நாடகளாக பொதுமக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் கிராமங்களில் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி கட்டி பிரச்சாரமும் நடைபெற்றது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment