காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சதீஷ்குமார் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த சனிக்கிழமை காவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நந்தபேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் வரும் இடத்தில் நின்று கொண்டிருந்த இவர் திடீர் என்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சதீஷ் குமாரின் இச்செயலை தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டதுடன், சதீஷ்குமார் தமது கையில் அவர் மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறில் சதீஷ்குமார் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.