தலைவர் முன்னிலையிலே தகராறு!! காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில்!கடும் சண்டை!!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத் தலைவர் திருநாவுகரசர் முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் தற்பொழுது தலைவராக இருக்கும் தேவேந்திரனை, தான் சொன்னதன் அடிப்படையிலேயே மாவட்ட பொறுப்பு வழங்கியதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் மேடையிலேயே எழுந்து சண்டையிட பாய்ந்தார்.

இதனைக் கண்ட திருநாவுக்கரசர் அவரை தட்டி இழுத்து அமைதி காக்கும்படி கூறினார். பின்னர் பேசிய திருநாவுக்கரசர் யார் யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை கட்சி தலைமையே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment