'தலைக்கு மேல் ஆபத்து' விமானத்தை கண்டு மக்கள் பரபரப்பு புகார்…!!

நெடுஞ்சாலைக்கு மேலே, மிக அருகில் செல்லும் விமானங்களால் ஆபத்து ஏற்படும் என, பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலைக்கு மேலே, மிக அருகில் செல்லும் விமானங்களால் ஆபத்து ஏற்படும் என, பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி, சுற்றுச்சுவரில் விமானம் ஒன்று மோதிச் சென்றது. ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யாதது தான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு குறுக்காகவே, திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் எண்-27 வழியாக செல்லும் விமானங்கள் ஏறி, இறங்குகின்றன. இதனால், விபத்து ஏற்படுவதை தவிர்க்க முன் எச்சரிக்கைநடவடிக்கை  எடுக்க வேண்டுமென, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment