தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.14 கோடி பறிமுதல்….

  • தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.14 கோடி பறிமுதல்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கி உள்ளனர்.

இதனையடுத்து, தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

இந்நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சென்னைக்கு மட்டும் 3 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment