தண்ணீர் பிடிப்பதில் உருவான தகராறு,கொலையில் முடிந்தது…!!

தண்ணீர் பிடிப்பதில் உருவான தகராறு,கொலையில் முடிந்தது…!!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சக நண்பரை அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த அச்சம் தவிழ்த்தான் கிராமத்தில் வசித்து வந்த சுந்தரமூர்த்தியும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஈஸ்வரனும் நண்பர்களாக இருந்தனர். தண்ணீர் பிடிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஈஸ்வரன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் சேர்ந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஈஸ்வரனை கைது செய்ததுடன் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சுந்தரமூர்த்தியை கொலை செய்தபோது மூன்று பேரும் மது போதையில் இருந்ததாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *