ஆறாவது நாளாக தமிழகத்தில் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் போரரட்டம் செய்தனர்.தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 1200 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
source: dinasuvadu.com