டெல்லியில் பட்டப்பகலில் பலசரக்கு கடையில் நுழைந்து மர்மநபர்கள் கொள்ளை…!!

டெல்லியில் பட்டப்பகலில் பலசரக்கு கடையில் நுழைந்து மர்மநபர்கள் கொள்ளை…!!

டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கடை ஒன்றில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. டெல்லியின் மக்கள் நடமாட்டம் மிகுந்த கேசவபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பலசரக்கு கடை ஒன்றில் பட்டப்பகலில் நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கியை காட்டி கடையின் உரிமையாளரை மிரட்டி கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பட்டப்பகலில் தலையில் ஹெல்மட் அணிந்த மூன்று பேர் அந்தக் கடையில் திடீரென நுழைந்து, அங்கிருந்த உரிமையாளரை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *