16 வயது சிறுமியை ஜார்க்கண்டில் பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் மனமுடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறினார்.
ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பினார். படுகாயம் அடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.