சென்னையில் பட்டப்பகலில் மகள் முன்னால் தந்தை வெட்டி கொலை !

 
சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் நாயக்கர் தெருவை சேர்ந்த கந்தன் என்பவர் தமது மகளை கல்லூரிக்கு விடுவதற்கு இரு சக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். முப்பாத்தம்மன் கோயில் எதிரே வந்தபோது, அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் கந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரவுடி லோகு என்பவருக்கும், கந்தனுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து குமரன்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
source: dinasuvadu.com

Leave a Comment