சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுனரை தாக்கிய போலீஸ்-காா் ஓட்டுநா் தீக்குளிப்பு

சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுனரை தாக்கிய போலீஸ்-காா் ஓட்டுநா் தீக்குளிப்பு

சென்னை அருகே சீட் பெல்ட் அணியாததால் காா் ஓட்டுநரை போக்குவரத்து காவலா்கள் கண்டித்ததால் மன உளைச்சலடைந்த ஓட்டுநா் தீக்குளித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பழைய மகாபல்லிபுரம் அருகே தனியாா் காா் ஓட்டுநரான மணிகண்டன் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலா்கள் காரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாமல் வந்தது தெரியவந்துள்ளது. இதனை போக்குவரத்து அதிகாரிகள் விசாரிக்க, இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினா் மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதனால் மனஉளைச்சலடைந்த மணிகண்டன் காரில் இருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளாா். அவரை தற்போது மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமாா் 3 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *