சிக்ஸர் மன்னன் அப்ரிடியின் சாதனைகளை தூக்கி சாப்பிடட மரண அடி மன்னன் கிறிஸ் கெய்ல்!

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
வங்க தேச அணிக்கு எதிராக செயின்ட் கீட்ஸில் நடைபெற்ற 3-வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 5 சிக்ஸர்கள் அடித்தார்.
இதன் மூலம் இவர் சர்வதேச போட்டிகளில் 476 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வீரர் அப்ரிடி சர்வதேச போட்டிகளில் 476 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.தற்போது அந்த சாதனையை கெய்ல் சமன் செய்துள்ளார்.மேலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி 20-ஓவர் போட்டி வங்க தேச அணியுடன் நடைபெறுகிறது.இந்த போட்டியில் இவர் அந்த சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment