சமூக அநீதி நீட்தேர்வை கைவிடக்கோரி..! சமூகநீதி போராளி சாவித்ரிபாய்பூலே பிறந்தநாளான இன்று (3.12.17) சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!

சமூக அநீதி நீட்தேர்வை கைவிடக்கோரி..! சமூகநீதி போராளி சாவித்ரிபாய்பூலே பிறந்தநாளான இன்று (3.12.17) சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!

 
சமூக அநீதியான நீட் தேர்வைக் கைவிடக் கோரி சேலத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேலு, அஇஜ மாதர் சங்க மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர்.
சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.தங்கவேலு, சேலம் வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், அஇஜமாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட பொருளாளர் என்.ஜெயலட்சுமி, தமுஎகச மாவட்ட கௌரவத் தலைவர் இல.வின்சென்ட், ததீஒமு நிர்வாகிகள் ஓமலூர் சின்ராஜ், சேலம் மாநகர வடக்கு தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *