சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த 2 வடமாநில இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த 2 வடமாநில இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சத்தியமங்கலத்தை அடுத்த மேட்டூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளிடம் பேச்சு கொடுத்தனர். இதைக்கண்ட கிராமமக்களுக்கு அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகமடைந்து இருவரையும் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், எலக்ட்ரானிக் பொருட்களை விற்க வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment