கோவை அருகே  10 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, 3 சிறுவர்கள் கைது…!

அரசுப் பள்ளியில் பயிலும் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, 3 சிறுவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமில், 10 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக்குள்ளானது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள், பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். கோவை இளம் சிறார் நடுவர் நிதிமன்றத்தில் அஜர்படுத்தபட்ட மூவரும், இளம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment