கேழ்வரகு புற்று நோய் வராமல் தடுக்குமா?

  • கேழ்வரகில் உள்ள நமைகளும், மருத்துவ குணங்களும்.

நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆனால், அந்த உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருப்பது நமது கையில் தான் உள்ளது. நமது முன்னோர்கள் தானிய வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்ததால் தான் அவர்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ்ந்தனர்.

Related image

இந்நிலையில், கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள நிலையில், வெயில் காலங்களில் நாம் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவு வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. கேழ்வரகு உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடிய ஆற்றலை கொண்டது.

தற்போது கேழ்வரகில் உள்ள நமைகளும், மருத்துவ குணங்களை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

நீரிழிவு நோய்

கேழ்வரகில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதில் பாலிஃபினோல்ஸ் மற்றும் ஃபைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இன்சுலினை அதிகரிக்கக் கூடிய க்ளைசெமியா அமிலத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை அதிகம்.

Image result for நீரிழிவு நோய்

மேலும், நிரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகு தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

புற்று நோய்

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் மாறியுள்ளது. கேழ்வரகில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் செல்களை தாக்கக் கூடிய புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகமாக உள்ளது.

Related image

மேலும், முகம் விரைவில் முதுமைத் தோற்றத்தை அடைவதையும் கட்டுப்படுத்தும். செல்களை புத்துயிருடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதயம்

Image result for இதயம்

கேழ்வரகு இதயம் சம்பந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கக் கூடிய  ஆற்றல் கொண்டது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளதால், இதய நரம்புகளின் செயல்படுகளை பராமரித்து சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், தொடர்ந்து கேழ்வரகினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மிக விரைவில் குறைந்து விடும். ஏனென்றால் இதில், நார் சத்து மற்றும் அமினோ ஆசிட் த்ரியோனைன் கல்லீரல் வெளியிடும் கொழுப்பை கரைத்து சுத்திகரிக்க உதவுகிறது.

Image result for உடல் எடை

இதனால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தாய்ப்பால்

Image result for தாய்ப்பால்

கேழ்வரகினால் செய்யப்பட்ட உணவினை அனுதினமும் உட்கொண்டு வந்தால், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க செய்கிறது. மேலும், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

எலும்புகள்

Related image

கேழ்வரகினால் செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி நமது உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் பலப்படும். மேலும், எந்த விதமான நோய்களும் நமது உடலை தாக்காதவாறு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்க செய்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment