கேரளாவை மீண்டும் மிரட்ட வரும் கனமழை..!4 மாவட்டங்களுக்கு யெல்லோ அலர்ட் எச்சரிக்கை ..!தயார் நிலையில் மீட்ப்புக்குழு ..!

கேரள மாநிலத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம் .

கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகினர்.

Related image

மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

அதேபோல் அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழை நின்று விட்டது.

Image result for kerala heavy rain

இந்நிலையில் கேரள மாநிலத்தில் மழையின் தாக்கம் மீண்டும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதேபோல் யெல்லோ அலர்ட் மீண்டும் விடப்பட்டுள்ளது.இது கனமழைக்கானா எச்சரிக்கை ஆகும்.

குறிப்பாக கேரளாவில் நாளை இடுக்கி, வயநாடு,பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு 2-ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் நாளை மறுநாள் இடுக்கி, திருச்சூர்,பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை  நாளை மற்றும் நாளை மறுநாள் முறையே 64 புள்ளி 4 மில்லி மீட்டரில் இருந்து 124 புள்ளி 4 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment