கேரளாவிற்கு ரூ.600 கோடி நிதி….!மத்திய அரசு நிதியை விடுவித்தது…!

மத்திய அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது.
Image result for கேரளா
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
Image result for கேரளா
இந்நிலையில் இன்று மத்திய அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.500 கோடி,மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்தது.
DINASUVADU

Leave a Comment