கூடைப்பந்தாட்ட வீராங்கனை குளிப்பதை வீடியோ எடுத்த மர்மநபர் கைது…!!

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் வந்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் சென்னை, பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.அப்போது அங்கு தங்கியிருந்த ஒரு வீராங்கனை குளிப்பதை மர்மநபர் ஒருவர் குளியலறை ஜன்னல் வழியே வீடியோ எடுத்ததார். இதைப்பார்த்த அந்த வீராங்கனை கூச்சலிட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்தவரை பிடித்து விசாரித்தனை மேற்கொண்டனர். அவர் விடுதியில் வேலை பார்க்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலாவுதீன் உசேன் என்பது தெரியவந்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment