குஷ்பு இல்லையென்றால் இவரிடம் என் காதலை சொல்லியிருப்பேன், சுந்தர்.சி!

சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அவரிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர்.

அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார்.

பிறகு ‘குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன்.

அந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி அவர், எப்போதும் சௌந்தர்யாவுடன் அவருடைய அண்ணன் இருப்பார், இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்து இறந்துவிட்டனர்’ என்று உருக்கமாக பேசினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment