குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது!

20 ஆக குரங்கணியில் வனத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சென்னையைச் சேர்ந்த நிவ்ய ப்ரக்ருதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர்.

இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டார். 9 பேர் மரணம் அடைந்தனர். மீதமுள்ளவர்கள் காயமடைந்த நபர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால்  குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. மதுரை மருத்துவமனையில் சென்னையைச் சேர்ந்த நிவ்ய ப்ரக்ருதி சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment