குட்கா முறைக்கேடு …!குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் ஏ.வி மாதவ ராவ் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ…!

குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ.

செப்டம்பர் 5 ஆம் தேதி  குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது .குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது.

Image result for குட்கா குடோன்

இதன் காரணமாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.

முதலாவதாக  குட்கா ஊழல் வழக்கில் ராஜேஷ், நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர் .

இதன்பின்னர் குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது செய்யப்பட்டனர் .அதில் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் ஏ.வி மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குட்கா தயாரிப்பு நிறுவன அதிபர் பி.வி.சீனிவாச ராவை கைது செய்தது சிபிஐ.இதுவரை ஊழல் தொடர்பாக 7 பேரை கைது செய்தது.

Image result for குட்கா குடோன்

இந்நிலையில் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர  ஏ.வி மாதவ ராவை சிபிஐ அதிகாரிகள் அவரது குடோனில் வைத்தே  விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணைக்கு பின்னர் குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ.

Leave a Comment