குட்கா ஊழல் வழக்கு-தீர்ப்பினை ஒத்திவைத்த நீதிமன்றம்…!!

குட்கா ஊழல் வழக்கில் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment