குடும்ப நீதிமன்றத்தில் மனைவியை வாளால் குத்தி கொலை ! கணவன் கொடூர செயல் !

ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் சிந்தூர்பங்க் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கும்பர்.  இவரது மனைவி சஞ்சிதா சவுத்ரி (வயது 18).  கடந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடந்தது.  பல மாதங்கள் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கணவர் கொடுமைப்படுத்துகிறார் என கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு மனைவி சென்று விட்டார்.

இந்நிலையில், பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி குடும்ப நீதிமன்றத்தில் ரமேஷ் முறையிட்டுள்ளார்.

இதில் ஆஜராக ரமேஷின் மனைவி சஞ்சிதா மற்றும் மனைவியின் பெற்றோர் வந்துள்ளனர்.  ஆனால் முன்பே திட்டமிட்டிருந்த ரமேஷ் அவர்களை வாள் ஒன்றால் வெட்ட முயன்றுள்ளார்.  இதில் சஞ்சிதாவின் தந்தை சுதன் அறை ஒன்றிற்குள் ஒளிந்து கொண்டு தப்பினார்.

ரமேஷின் தாக்குதலுக்குள்ளான சஞ்சிதா, அவரது தாயார் மற்றும் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதில் சஞ்சிதா உயிரிழந்து விட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment