கிரிக்கெட் வீரர் பேட்டில் உள்ள ஆபாச வார்த்தை!ஆர்வத்துடன் பார்த்த ரசிகர்கள்..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோஸ் பட்லரின் பேட் கைப்பிடியில் எழுதப்பட்டிருந்த ஆபாச வாசகத்தால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவரது பேட் கைப்பிடியில் ஆபாசமான சொல் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு பேட்டில் ஆபாச வார்த்தையை எழுதி வைத்திருப்பது,  ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர் மீது ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஜோஸ் பட்லர், தமது பேட்டில் எழுதப்பட்டுள்ள இந்த வார்த்தையை பார்க்கும் போது, மைதானத்தில் மிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் சிறப்பாக விளையாட தூண்டும் என்பதற்காகவே அப்படி எழுதி வைத்ததாக தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment