காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது  : எடப்பாடி…!

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காவிரி டெல்டா பாசனத்திர்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.முதல்வர் தண்ணீர் திறந்து விடுவது இதுவே முதல் முறை.இன்று காலை 10 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதனை திறந்துவைத்தார்.பின்பு அவர் பேசியதாவது….

காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது  என்று கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment