கார்த்திகை மாத பிரம்மோற்சவம் பத்மாவதி தயார் தேரில் எழுந்தருளி அருள்பாளித்தார்.!!


கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது.திருப்பதி திருச்சானூரில் உள பத்மாவதி தாயார் கோவிலில்  பிரம்மோற்ச விழா நடந்து வருகிறது.இந்த விழாவின் 7 ம் நாளாகிய நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் அங்கு உற்சவராக இருக்கும் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்த நிலையில்இதனை தொடர்ந்து அவருக்கு என்று உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. இந்நிலையில் சரியாக இரவு 8 மணி முதல் 11 மணி வரை தாயார் சந்திர பிரபை வாகனத்தில்  4 மாட வீதிகளில் உலா வந்தார்.

மேலும் விழாவின் 8 ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது.இதில் பத்மாவதி  தாயார் தேரில் எழுந்தருளிய 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.

author avatar
kavitha

Leave a Comment