காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு சிறப்பு கவுரவம்!!

பிரதமர் நரேந்திர மோடி மட்டும் லிமோசன் காரில் பயணிக்கவுள்ளார்.

லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில்,   52 காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு லண்டனில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த பேருந்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் லிமோசன் ரக காரில் பயணித்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment