கழுத்தில் அணிந்த துணி..!இயந்திரத்தில் சிக்கி…கழுத்து இறுக்கி…இளைஞர் பரிதாபம்

  • இயந்திரத்தில்  கழுத்தில் அணிந்திருந்த துணி சிக்கி கழுத்து இறுக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
  • வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திருப்பூர் அருகே பரிதாபம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை இவர் திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தின் பிரிவு அருகே ஒரு இறைச்சிக்கடையொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.சம்பவத்தன்று  பணி முடிந்த நிலையில் இறைச்சி வெட்ட பயன்படுத்தக்கூடிய கட்டையை அரவை இயந்திரம் மூலமாக சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த அரவை இயந்திரத்தில் ஏழுமலை தன் கழுத்தில் அணிந்திருந்த துணியானது சிக்கிக் கொண்டது.என்ன நடந்தது என்று யோசிக்கும் வேளையில் அவருடைய கழுத்து இறுக்கியது.

கழுத்து இறுகிய நிலையிலும் அருகில் இருக்கும் மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு தன் கழுத்தில் சிக்கிய துணியை கையில் இருந்த கத்தி மூலமாக அகற்ற முயன்றார். ஆனால்  முயற்சி பலன் அளிக்காமல் போனது கழுத்தில் இருந்த துணியை அகற்ற முடியாமல் கழுத்து இறுக்கி உயிரிழந்தார் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

author avatar
kavitha