கட்சியை விட நாட்டு நலனே பா.ஜ.க.,விற்கு முக்கியம் – பிரதமர் மோடி…!!

கட்சியை விட நாட்டு நலனே பா.ஜ.க.,விற்கு முக்கியம் – பிரதமர் மோடி…!!

கட்சியை விட நாட்டு நலனே பா.ஜ.க.விற்கு முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். தங்களுக்கு கட்சியை காட்டிலும் தேசிய நலனில் அக்கறை செலுத்துவதே எப்போதும் முக்கியம் என்றார்.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ராணுவத்தை பலப்படுத்த அரசு முயற்சித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றார்.
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை காப்பாற்ற காங்கிரஸ் பாடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *