கடல்சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல்சீற்றத்தின் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாகவும் கடல் சீற்றத்தின் காரணமாகவும் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகளின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரியும், அப்பகுதியில் துண்டில் வளைவு ஏற்படுத்தி தரவும்  கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment