கடலூர் மாவட்ட விவசாயிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

ம.ஆதனூரில் கதவனை கட்டப்படும் என்றும் அறிவித்து அதற்காக 410 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆனதாக குற்றம் சாட்டினர்.

இந்த ஆண்டும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கதவணை பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தினர்.

இந்த திட்டம் மூலம் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பயன்பெறும் என்று கூறிய விவசாயிகள், இதுகுறித்த கவனத்தை ஈர்க்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment