கடந்த ஒரே நாளில் கொரோனாவால் 396 பேர் இறப்பு;10,264 பேர் குணமடைவு!

கடந்த ஒரே நாளில் கொரோனாவால் 396 பேர் இறப்பு;10,264 பேர் குணமடைவு!

இந்தியா:கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 396 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,44,882 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  1600 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,44,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 396 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,66,980 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,264 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  3,39,67,962 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,09,940 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 1,19,38,44,741 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 90,27,638 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Join our channel google news Youtube