கஜா புயல் :இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி..! முதல்வரிடம் வழங்கப்பட்டது…!

கஜா புயல் தமிழகத்தில் 8 மாவட்டங்களை கடுமையாக சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.இன்னும் மக்களுக்கும் முழுமையான அடிப்படை வசதிகள் சென்றடைய வில்லை,பல பகுதிகளில் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பொதுமக்களும் , நடிகர்களும் ,அரசியல் தலைவர்களும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

Related image

மேலும் இருக்க இருப்பிடமின்றி சிலர் சூடுகாட்டில் தங்கி அங்கேயே சமைத்து உறங்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது.

Image result for gaja cyclone people

இப்படி டெல்டாவே சுக்கு நூறாக நொருங்கி கிடக்கும் வேளையில் கஜா புயல் நிவாரண நிதியாக பலரும் முதலமைச்சர் நிவாரண் நிதிக்கு நிதியை அனுப்பி வைத்தும்,நேரடியாக வழங்கியும் வருகின்றனர்.தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முதல்வரிடம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது . இந்த நிதியை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் இதற்கான காசோலையை வழங்கினார்.

author avatar
kavitha

Leave a Comment