எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு-எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர்

எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் இரு மடங்காக உயர்த்த சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது ரூ 55,000 ஆகும். அதனை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்துள்ளது. அதே போல் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ.2,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியமும் ரூ.20,000 ஆக அதிகரிக்கும். இதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை தொடர்ந்து ஆர்.கே.நகர் சுயேச்சை எம்.எல்.ஏ. டி.டி.டி. தினகரனும் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வரும் இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வு அவசியமா ..? என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment