எம்.எல்.ஏக்களுக்கு 150 கோடி பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ்!!

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 150 கோடி ரூபாய் தருவதாக  பா.ஜ.க. வின் ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசியதாக தொலைபேசி உரையாடல் ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி உக்கரப்பா, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராய்ச்சூர் தொகுதி எம்.எல்.ஏ பசனகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார். இரு நாட்களாக அவரை தொடர்பு கொண்டு பேசிய ஜனார்த்தனன் ரெட்டி, முதலில் 25 கோடி தருவதாகவும், அடுத்த நாளில் 150 கோடி வரை தருவதாகவும், அமைச்சர் பதவி வழங்கப்படுமென ஆசை வார்த்தை காட்டியதாக புகார் கூறினார். இதுகுறித்த ஆடியோ பதவியையும் உக்கரப்பா வெளியிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment