எந்தவித அறிவிப்புமின்றி பள்ளி கட்டிடம் இடிப்பு..!!மாணவர்கள் தவிப்பு..!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நாணமங்கலம் கண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் நோக்கில் பழைய கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை முற்றிலுமாக இடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறையான மாற்று இடமும் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகைட்டதை அடுத்து, வட்டாட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த வட்டாட்சியரை சூழ்ந்துகொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்த நிலையில், மாற்று இடத்துக்கு உடனடியாக ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment