எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே இலக்கு…!திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே இலக்கு…!திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும், மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், வீழ்த்துவதே நமது உடனடி இலக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் எப்போது வந்தாலும், நமது இலக்கை நிறைவேற்ற தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி என்பதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என சுட்டிக்காட்டி உள்ள அவர்,தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவோரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என திட்டவட்டமாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இணைந்து பணியாற்றி, வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றியை குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *